Saturday, 29 October 2016

பன்னிரு லக்னங்களின் விரிவான பலன்கள்


பன்னிரு லக்னங்களின் விரிவான பலன்கள்

 
இனி பன்னிரு லக்னங்கள் பற்றி சித்தர்கள் அருளிய சில விதிகளை ஒவ்வொரு லக்னமாக பார்ப்போம்.

மேக்ஷம்
          மேக்ஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனிக்கிரகம் கொடிய  பலன்களை செய்பவராக இருந்தாலும் மேக்ஷ லக்னத்தில் சூரியன் அமர்ந்தும், சுக்கிரன், குரு  இருவரும் கூடி ரிக்ஷபத்தில் அமர்ந்து சந்திரன் கடகத்தில் ஆட்சி பெற்றும் இருந்தால் பாக்கிய யோகங்கள் ஒரளவு கிட்டும்.
       மேக்ஷ லக்னத்திலோ மகரத்திலோ செவ்வாய் முறையே ஆட்சி அல்லது உச்சமாக அமைந்தால் மிகச் சிறப்பான யோகத்தினை ஏற்படுத்தும், லக்னத்தில் சந்திரன் அமர்ந்து அவரைச் செவ்வாய் பார்த்தால் அரசாங்க பதவி கிட்டும், லக்னத்தில் அமர்ந்த சந்திரனை குரு தனுசில் அமர்ந்து பார்த்தால் மிகச் சிறப்பான பலன் களை தருவார்
      மேக்ஷ லக்னத்தில் பிறந்தவர்கள் ஜனன ஜாதகத்தில் செவ்வாய், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் அமைந்தால் துன்பத்தை தரும் பலன் களை தருவார், மேலும் விகார உணர்ச்சிகளை அதிகமாக்கித் தவறான நடத்தையை உண்டு பண்ணுவார்.
மேக்ஷ லக்னத்திற்கு செவ்வாய் லக்னாதிபதி ஆனாலும் அக்ஷ்டமாதி எனும் வலிமை பெருவதால் எந்த வீட்டிலும் தனிமையாக இருந்தால் நற்பலன் களை செய்ய முடியாது,
செவ்வாய் சுக்ரனுடன் இணைந்து தனஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்தால் தன யோகத்தை தருவதுண்டு.இதை போல் குருவுடன் செவ்வாய் சேர்ந்து இரண்டாம் வீட்டில் அமர்ந்தாலும் தன யோகம் உண்டு,செவ்வாய் புதனுடன் சேர்ந்து எந்த வீட்டில் நின்றாலும் நன்மை கிடைக்காது, செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்து அமைந்தால் நன்மைகள் ஏற்பட கூடும்.

அடுத்த பதிவில் ரிக்ஷப லக்னத்தின் சூட்சுமங்களை பார்ப்போம்,
"அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்"
சித்தர்கள் ஆசியுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்,

ஸ்ரீ விஷ்ணு ஜோதிடம்

நன்றி
என்றும் அன்புடன்,
      ஆனந்த் ஈஸ்வர்.

No comments:

Post a Comment

பன்னிரு லக்னங்களின் விரிவான பலன்கள்

பன்னிரு லக்னங்களின் விரிவான பலன்கள்   இனி பன்னிரு லக்னங்கள் பற்றி சித்தர்கள் அருளிய சில விதிகளை ஒவ்வொரு லக்னமாக பார்ப்போம்....