பாரசார முனிவரின் பன்னிரு லக்கினங்கள்
லக்னமே ஒரு மனிதனின் எண்ணங்களை பிரதிபலிக்கும் காரணியாகும். ஏனென்றால் ஒரு உயிர் பூமியில் ஜெனிக்கும் போது இருந்த சூரிய பகவானின் நிலையை வைத்து லக்னம் கணக்கிட படுகிறது.
எனவே "எண் சாண் உடம்புக்கு சிரசே பிராதானம்" என்ற வகையில் ஜோதிடத்தின் சிரசான(தலை) லக்னத்தை கொண்டே மனிதனின் உருவம், அழகு, எண்ண ஒட்டம், நிலைப்பாடு, கொள்கை, ஆகியவைகள் அறியபடுகிறது.
மேலும் நமது சித்தர்கள் லக்னத்தைப் பற்றி கூறியுள்ள ஜோதிட ரகசியங்களை வரும் பதிவுகளில் ஒவ்வொரு லக்னமாக பார்ப்போம்.
இன்று ஒவ்வொரு லக்னத்திற்கும் நன்மை செய்யும் கிரகம் எது, தீமை செய்யும் கிரகம் எது, என்பதை சுருக்கமாக காண்போம்.
லக்னம்
|
அதிபதி
|
நன்மை செய்யும்
கிரகங்கள்
|
தீமை செய்யும்
கிரகங்கள்
|
மேக்ஷம்
|
செவ்வாய்
|
குரு, சூரியன், சந்திரன்
|
சனி, புதன், சுக்கிரன்
|
ரிக்ஷபம்
|
சுக்கிரன்
|
புதன், சனி, சூரியன்
|
செவ்வாய், குரு
|
மிதுனம்
|
புதன்
|
சுக்கிரன், சந்திரன், சனி
|
சூரியன், குரு, செவ்வாய்
|
கடகம்
|
சந்திரன்
|
குரு, செவ்வாய், சூரியன்
|
புதன், சுக்கிரன்
|
சிம்மம்
|
சூரியன்
|
குரு, செவ்வாய், புதன்
|
சனி, சுக்கிரன், சந்திரன்
|
கன்னி
|
புதன்
|
சுக்கிரன், சனி, சந்திரன்
|
சூரியன், செவ்வாய், குரு
|
துலாம்
|
சுக்கிரன்
|
புதன், சனி, சந்திரன்
|
சூரியன், செவ்வாய், குரு
|
விருச்சிகம்
|
செவ்வாய்
|
குரு, சூரியன்
|
புதன், சுக்கிரன், சந்திரன்
|
தனுசு
|
குரு
|
செவ்வாய், சூரியன்
|
புதன், சுக்கிரன், சந்திரன்
|
மகரம்
|
சனி
|
புதன், சுக்கிரன்
|
சூரியன், செவ்வாய், குரு
|
கும்பம்
|
சனி
|
குரு, புதன், சுக்கிரன்
|
சந்திரன், செவ்வாய்
|
மீனம்
|
குரு
|
செவ்வாய், சந்திரன்
|
புதன், சுக்கிரன், சூரியன்
|
இந்த அட்டவணையில் ஒரு விசயம் நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் அறிய முடியும்,
அதாவது இங்கே கிரகங்கள் இரண்டு அணிகளாக உள்ளதை காணுங்கள்
அதை நாம் "அருள் அணி, பொருள் அணி " என வைத்து கொள்வோம்,அதை காணலாம்,
அருள் அணி
|
பொருள் அணி
|
குரு
|
சுக்கிரன்
|
சூரியன்
|
புதன்
|
செவ்வாய்
|
சனி
|
இதில் சந்திரன் மட்டும் இரு அணிகளிலும் சேர்ந்து நடு நிலை கிரகமாகிறார்.
செம்பாம்பாகிய ராகு பொருள் அணியிலும், கரும்பாம்பாகிய கேது அருள் அணியிலும் சேர்ந்து கொள்கிறார்கள்.
நாளை முதல் லக்னங்களை பற்றி நமது சித்தர்களின் கூற்றுகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
சித்தர்களின் ஆசியுடன் நாளை சந்திப்போம்,
ஸ்ரீ விஷ்ணு ஜோதிடம்
என்றும் அன்புடன்,
ஆனந்த் ஈஸ்வர்.

No comments:
Post a Comment